தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#FirstOn: இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய காட்டு யானையின் சிசிடிவி காட்சி! - #Exclusive: இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய காட்டு யானையின் சிசிடிவி காட்சி!

கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு பேரை கொன்ற காட்டு யானை நடமாடடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

elephant

By

Published : Aug 30, 2019, 9:01 AM IST

Updated : Aug 30, 2019, 10:34 AM IST

பொள்ளாச்சி வனசரகத்துக்கு உட்பட்ட நவமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைவாழ் மக்களான சிறுமி ரஞ்சனி, முதியவர் மாகாளி ஆகியோர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இதையடுத்து டாப்சிலிப் கோழிக்காமுக்தி பகுதியிலிருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைத்தும், வாகன ரோந்து பணியில் ஈடுபட்டும் யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய காட்டு யானையின் சிசிடிவி காட்சி!

இந்நிலையில், இரவு வனப் பகுதியைவிட்டு வெளியே வந்த யானை, ஜீரோ பாய்ண்ட் வழியாக புளியா கண்டி பகுதிக்குள் வரும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது. இதனால் அந்த ஊர் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : Aug 30, 2019, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details