தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2022, 7:28 AM IST

ETV Bharat / state

’ரவுடி பேபி’ சூர்யா மீது குண்டர் சட்டம்..!

அண்மையில் கைது செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம் ’ரவுடி பேபி’ சூர்யாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

’ரவுடி பேபி’ சூர்யா மீது குண்டர் சட்டம்..!
’ரவுடி பேபி’ சூர்யா மீது குண்டர் சட்டம்..!

மதுரை:மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் ஷா, என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார்.

இவர்கள் ஆபாசமாக, வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் மீது கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததைத் தொடர்ந்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர், இணையதளங்களில் ஆபாசமாக பேசியதாகக் கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர் ஷா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் ’ரவுடி பேபி’ சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பீப் பாடல் விவகாரம்; சிம்பு மீதான மற்றொரு வழக்கும் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details