தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் - பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூரில் அனைத்து நாள்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 7, 2021, 4:55 PM IST

கோயம்புத்தூர்: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் கோயில்களில் பக்தர்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது.

இதனைக் கண்டித்தும் அனைத்து நாள்களிலும் கோயிலை திறக்க வலியுறுத்தியும் அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் முன்பு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் காளி வேடம் அணிந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனால் அவினாசி சாலை தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details