தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

கோயம்புத்தூர்: கோவை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் வாடகை எடுப்பதில் நடந்த தகராறில், கால் டாக்ஸி ஓட்டுநர் சூர்யா என்பவர், மற்றொரு கால் டாக்ஸி ஓட்டுநர் ஃபைசலைக் கத்தியால் குத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : May 27, 2021, 10:46 PM IST

டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஃபைசல் என்பவர் ரயில் நிலையத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இதேபோல செல்வபுரம் பகுதி இந்து முன்னணி அமைப்பின் நகரச் செயலாளராக உள்ள சூர்யா என்பவரும் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கோவை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் வாடகை எடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதில் சூர்யா, ஃபைசலைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஃபைசல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கோவை பந்தய சாலை காவல்துறையினர் இந்து முன்னணியைச் சேர்ந்தவரும், ஓட்டுநருமான சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தொடரும் பாலியல் தொல்லை: பிரபல பயிற்சியாளர் மீது வீராங்கனை புகார்!

ABOUT THE AUTHOR

...view details