ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களாக இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, டாஸ்மாக் கடைகள் முன்பு பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தனிமனித இடைவெளி கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள், மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.