தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு'- உ.பி. முதலமைச்சர் புகழாரம் - Coimbatore district newsin tamil

பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு எனவும், பெண்களுக்கும், மகளிருக்குமான முன்னேற்றத்தை நம் கூட்டணியால் மட்டும்தான் கொடுக்கமுடியும் எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது தெரிவித்துள்ளார்.

Yogi Adityanath  UP Chief Minister  tn election campaign
'பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு'- உ.பி. முதலமைச்சர் புகழாரம்

By

Published : Mar 31, 2021, 7:09 PM IST

கோவை:கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ராமரின் புன்னிய பூமியில் இருந்து நான் வந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் சேர்ந்து டெக்ஸ்டைல் சிட்டி என்ற இந்த கோவை மண்ணை உருவாக்கியுள்ளனர். பலரும் இங்கு கல்வித்தரத்தை மேம்படுத்த பாடுபட்டிருக்கிறார்கள். ராமர் ஆலய கட்டுமானத்திற்காக தமிழ்நாடு சார்பில் ரூ. 120 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்குமான வளர்ச்சி என்பது நமது தாரக மந்திரம். தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி புதிய விடியலை நோக்கிச் செல்கிறது. தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள மோடியை எண்ணிப்பார்க்கவேண்டும். பிரதமர் மோடி பல திட்டங்களை கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியுள்ளார். இலவச கேஸ், வீடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 54 லட்சம் கழிப்பறைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கட்டிக்கொடுத்துள்ளது.

'பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு'- உ.பி. முதலமைச்சர் புகழாரம்

தமிழ்நாட்டில் பெரிய கல்விநிறுவனங்கள் வரவுள்ளது. பாகுபாடில்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சென்றடையவேண்டும். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு இன்னும் அதிக நிதி கிடைக்கும். வானதி சீனிவாசன் வெற்றி பெற்றால், மத்திய அரசின் திட்டங்களையும், நிதியையும் கோவைக்கு கொண்டுவருவார்.

பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு. பெண்களுக்கு மரியாதை செலுத்தும் மண், பெண் குழுந்தைகளுக்கும், மகளிருக்குமான முன்னேற்றத்தை நம் கூட்டணியால் மட்டும்தான் தரமுடியும். திமுக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். பெண்களுக்கு எதிராக செயல்படும் திமுக காங்கிரஸ் கூட்டணியை வளரவிடக்கூடாது. திமுக கூட்டணி ஊழல் மிக்கது. பல ஊழல்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்றுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த யோகி ஆதித்யநாத்

ABOUT THE AUTHOR

...view details