தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுலா அதிகரித்துள்ளது" - அமைச்சர் ராமச்சந்திரன்! - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

இன்னும் ஓராண்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Spiritual
Spiritual

By

Published : Jan 14, 2023, 7:48 PM IST

கோவை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவை ஸ்மார்ட்சிட்டி வாளாங்குளம் படகு இல்லம் மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், படகு இல்லத்தில் கூடுதல் வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராமச்சந்திரன், "சுற்றுலாத் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கிடையாது. தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகம் உள்ள காரணத்தால் ஆன்மிகச் சுற்றுலா அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் கட்டிய கலை நுணுக்கங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.

நான் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாத காலங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லங்களில் கூடுதல் வசதிகளை செய்வதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாருக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வாளாங்குளத்தில் இருக்கின்ற படகு இல்லத்தில் அதிவேக படகுகள் கொண்டு வர முடியுமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி இடங்களில் வாகன நிறுத்தம் வசதி குறைவாக உள்ளது, அதனை மேம்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ள உள்ளன.

மாநகராட்சி பகுதிகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என மக்கள் பிரித்து போடுவதற்காக குப்பை தொட்டிகளை வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 12 லட்சம் வெளிநாட்டினரும், 11 கோடி உள்ளூர் மக்களும் சுற்றுலாவிற்காக வந்துள்ளனர், தமிழ்நாடு இதிலும் முதலிடத்தில் உள்ளது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு 1,500 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது, 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது" என்று கூறினார்.

இதையும் படிங்க: Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை!

ABOUT THE AUTHOR

...view details