தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2021, 5:11 PM IST

ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த கிருமி நாசினி வாகனம் தடுத்து நிறுத்தம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்த நிலையில், முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்த கிருமி நாசினி வாகனம் தடுத்து நிறுத்தம்
எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்த கிருமி நாசினி வாகனம் தடுத்து நிறுத்தம்

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

அப்போது அங்கு வந்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் கிருமி நாசினியை வாகனங்கள் மூலம் தெளிக்க முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதியின்றி வாகனங்களில் கிருமி நாசினியை தெளிக்க கூடாதெனக் கூறி, வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இதனால் அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதி பெற்று வாகனத்தை எடுத்து கொள்கிறோம் எனக் கூறி விட்டு அதிமுகவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details