தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து கடந்த இரண்டு மாதங்களாக நோய்த்தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவையில் தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் இரண்டு மாநில ஊழியர்களும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இரு மாநில சோதனைச் சாவடிகளிலும் இ-பதிவு விண்ணப்பங்கள் இருந்தால் மட்டுமே வாகனங்கள் எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.