கோயம்புத்தூர் கோவில்மேடு, திலகர் வீதி பகுதியில் வசித்து வரும் மனோகரன் என்பவரது வீட்டின் குளியலறையில், இன்று காலை (ஜூன் 26) பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்ட அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் அங்கு சென்ற முரளி, குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கியிருந்த பாம்பை மீட்டு, தான் கொண்டு வந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து வனப் பகுதிக்குள் அவர் அதனை விட இருந்த நிலையில், பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்கத் தொடங்கியுள்ளது.