கோயம்புத்தூர்: மதுக்கரை, திருமலையம்பாளையம், பெரியகுயிலி, செட்டிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு முறையான அனுமதியின்றி கற்கள், எம் - சாண்ட் மண், பெரிய பாறைகள் போன்றவை கொண்டுசெல்லப்படுகின்றன.
கேரளாவிலிருந்து வரும் கனரக வாகனங்கள், அதிக அளவில் கனிமங்களை எடுத்துச் செல்லும் நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) கனரக வாகனங்களை திருமலையாம்பாளையம் பகுதி மக்கள் பிடித்து கந்தே கவுண்டன்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்தக் கனரக வாகனங்களை கனிமப்பொருள்களுடன் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவற்றிற்கு அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் அந்த வாகன உரிமையாளர்கள் கேரளாவிலிருந்து வராத நிலையில், அவற்றை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) இரவு கேரளாவிலிருந்து பெரியகுயிலி பகுதிக்கு பத்துக்கும் மேற்பட்ட கேரள கனரக வாகனங்கள் கனிமப்பொருள்களை எடுத்துச் செல்ல வந்தன.