தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2023, 10:43 PM IST

ETV Bharat / state

கணவரை கொலை செய்ய திட்டமிட்ட துணை நடிகை கைது

கோயம்புத்தூரில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்ட துணை நடிகை கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக துணை நடிகையின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரம்யா பீளமேட்டில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் காரணமாக ரம்யா கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகர் உடன் நட்பாக பழக ஆரம்பித்தார். இதையடுத்து ரம்யா, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட நாடகங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

மறுபுறம் ரமேஷ் 2 குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து சிறிது சமாதானம் ஏற்பட்டு ரம்யா ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரம்யா தனது நண்பர் டேனியல் சந்திரசேகரனை தொடர்பு கொண்டு, தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமை படுத்துவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் கூறி உதவி கேட்டுள்ளார்.

இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு ரம்யா-ரமேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதி சண்டை இழுத்துள்ளார். அதோடு தான் மறைத்து வைத்திருந்த ஆயுதம் மூலம் ரமேஷின் கை, கழுத்து தலை பகுதிகளில் கடுமையாக தாக்கி விட்டு தப்பித்துள்ளார்.

அதன்பின் ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் ரம்யாவின் மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது துணை நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தொடரும் சோகம்! மின் கம்பத்தில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details