கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "58 ஆண்டுகளுக்கு முன்பு இதே பொள்ளாச்சி நகராட்சியை காங்கிரஸிடமிருந்து, திமுக கைப்பற்றியதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 58ஆண்டுகளுக்கு முன்பே சாதித்த நம்மால், இப்போது சாதிக்க முடியாதா?.