கோவையின் கதாநாயகனான சின்னத்தம்பி என்கிற காட்டு யானையை விவசாய நிலத்தை சேதப்படுத்துகிறது என எழுந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறையினர்.வனத்துறை பிடிக்கும்போது ஏற்பட்ட காயங்களால், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. வனத்துறை ஆரம்பத்தில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என கூறினர் எல்லா யானைகளையும் கும்கியாக மாற்ற முடியாது. மேலும் காட்டில் இருந்து பிடிக்கப்படும் யானைகளுக்கு ஆரம்பத்தில் கும்கிக்கான பயிற்சிகள் கொடுக்கப்படும் பாகனின் சொற்பேச்சு கேட்கக்கூடிய யானைகளே கும்கியாக மாற்றப்படும் அவ்வாறு கேட்காத பட்சத்தில் வளர்ப்பு யானையாக மாற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
கும்கியாக மாற்றும் திட்டம்சின்னதம்பியை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என வனத்துறை தெரிவித்திருந்த போது பயிற்சி கொடுக்க செல்லத்துரை மற்றும் காளியப்பன் என இருவரை சின்னத்தம்பியின் பாகன்களாக நியமித்தது ஆனைமலை வனச்சரகம். டாப்ஸ்லிப் கோழிக்கழுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து கும்கிக்கான பயிற்சிகளை சின்னத்தம்பிக்கு அளித்து வந்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது , ஆரம்பத்தில் கும்கிக்கான பயிற்சிகளை சின்னத்தம்பிக்கு கொடுத்தபோது மனிதர்களுடன் பழகிய காரணத்தால் பாகனின் சொற்ப்பேச்சுக்கு கட்டுப்பட்டது மேலும் பாகனின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றியது. சின்னத்தம்பி உருவத்தில் பெரியதாக இருந்ததால் கும்கிக்கான அத்தனை குணாம்சங்களையும் சின்னத்தம்பி பெற்றிருந்தது. இதையடுத்து கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர்” என்றார்.
பெரும்பாலும் ஆண் யானைகளே கும்கியாக மாற்றப்படுகின்றன. யானைகள் இணை சேர்வதற்கான காலம் வரும் போது ஆண் யானைகளுக்கு “மஸ்த்” என்ற அழைக்கப்படும் மதம் பிடித்து விடும் இந்நாட்களில் யானையின் அருகே பாகன் உட்பட எந்த நபரும் செல்லமுடியாது யார் பேச்சையும் கேட்காமல் யானைகள் மிகவும் மிகவும் ஆக்ரோசமாக காணப்படும். இந்நாட்களில் யானைக்கு பயிற்சி கொடுப்பது மிகவும் சிரமம். நல்வாய்ப்பாக சின்னத்தம்பிக்கு ஒரே ஒரு முறை மட்டுமே மஸ்த் பிடித்து அதுவும் உடனே சரியானதால் சரியாக 13 மாதங்களில் கும்கிக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அமைதியான சின்னத்தம்பியை ஆக்ரோசமாக சண்டையிடும் கும்கியாக மாற்றியுள்ளனர் வனத்துறையினர்.