போலி டீ தூள் கம்பெனிக்கு சீல்! - உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை
கோவை: பொள்ளாச்சி அருகே செயல்பட்டுவந்த போலி டீ தூள் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு சீல் வைத்தனர்.
போலி டீ தூள் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் அருகே போலி டீ தூள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆனந்தன் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த 712 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். மேலும் அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.