கோயம்புத்தூர்:ஆலாந்துறையை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (37) - தேவி (31) தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பூளுவப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜன.4) காலை இருவரும் வேலைக்குச் செல்வதற்காக சிறுவாணி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆலாந்துறை அரசு பள்ளி அருகே அரசு பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. பேருந்து மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.