தமிழ்நாடு

tamil nadu

'பராமரிப்பின்றி கோயில்கள் அழிந்துவருவது வேதனை!'

By

Published : Mar 26, 2021, 5:16 PM IST

கோயம்புத்தூர்: அழிந்துவரும் கோயில்களின் காணொலிகளை ட்வீட் செய்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்குப் பல்வேறு துறை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

Isha Foundation
Isha Foundation

தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக ட்விட்டரில் வலியுறுத்திவருகிறார். இந்த முன்னெடுப்பை வரவேற்கும்விதமாக #FreeTNTemples #கோயில்அடிமைநிறுத்து ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பிரபல பெண் தொழில் அதிபரும் பையோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார், முன்னாள் சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஐபிஎஸ், நடிகைகள் கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி (கே.ஜி.எஃப். பட நடிகை), ரவீனா டன்டன், மெளனி ராய், திரெளபதி பட இயக்குநர் மோகன், பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் ஆதரவு அளித்துள்ளனர்.

பராமரிப்பு இன்றி அழிந்து வரும் கோயில்கள்

நடிகை கஸ்தூரி தனது பதிவில், “நான் ஆன்மிக யாத்திரைகளுக்குச் சென்றுவருகிறேன். நம் புனித தலங்களில் நடக்கும் இதயமற்றச் சுரண்டல்களைப் பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல் நம் கோயில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

கிரிக்கெட் வீரர் சேவாக், “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறும், மிகுந்த முக்கியத்துவமும் கொண்ட நம் கோயில்களின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. இது சரிசெய்யப்படுவதோடு, முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம். இந்தத் தேவையான முன்னெடுப்பில் சத்குருவுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

நடிகை ஸ்ரீதிவ்யா, “இது மதம் பற்றிய விஷயம் அல்ல. இது சமூகத்தின் ஒரு தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதி, அவமரியாதை மற்றும் சமநிலையற்றத் தன்மை பற்றிய விஷயம். முதலில் தமிழ்நாட்டில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால் பின்னர், நாடு முழுவதற்கும் மாற்றம் உருவாக்கிவிடலாம்” எனக் கூறியுள்ளார்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

நடிகை கங்கனா ரனாவத், “இது இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நம் நாகரிகத்திற்கு நாம் என்ன செய்துவைத்திருக்கிறோம். நம் நாட்டிற்காகவும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்காகவும் எழுந்து நிற்காமல் இருப்பது அவமானமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

இது தொடர்பாக சத்குரு வெளியிட்டுள்ள காணொலியில் அவர் கூறியிருப்பதாவது: #கோயில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவோ, போராட்டம் செய்வதற்காகவோ தொடங்கப்படவில்லை. மேலும், யாரோ ஒரு தரப்பினரைத் தாக்கும் நோக்கத்திலும் இதை நாங்கள் தொடங்கப்படவில்லை.

தொன்மையான நம் தமிழ்நாட்டு கோயில்களின் அவலநிலையைப் பார்த்து எங்களுக்குள் உருவான ஆழமான வலியையும் வேதனையும் வெளிப்படுத்துவதற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். நம் கோயில்கள் பெரியளவில் சிதைக்கப்பட்டுவருவதாக யுனெஸ்கோ அமைப்பே கூறியுள்ளது.

இதை நிரூபிக்கும்விதமாக, பொதுமக்களும், ஈஷா தன்னார்வலர்களும் நூற்றுக்கணக்கான காணொலிகளையும், புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பிவருகின்றனர்.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

தமிழ் கலாசாரத்தின் இதயமாகவும், பக்தியின் மையமாகவும், கலைகள், மொழி போன்றவற்றின் பிறப்பிடமாகவும் விளங்கும் கோயில்கள் இப்படி அழிந்துவருவதைப் பார்க்கும்போது இதயம் வலி கொள்கிறது.

ஆயிரக்கணக்கான கோயில்கள் எவ்வித பராமரிப்புமின்றி அழிந்துவருகின்றன. எனவே, இக்கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டிய தருணமிது.

பராமரிப்பின்றி அழிந்துவரும் கோயில்கள்

இதற்காக நான் இன்று 100 ட்வீட்களைப் பதிவிட உள்ளேன். தயவுசெய்து அனைவரும் உங்கள் மதங்களைக் கடந்து இதற்கு ஆதரவு கொடுங்கள். இது மிகப்பெரிய அநீதி. இது இந்துக்களைப் பற்றியது மட்டும் அல்ல; நம் தேசத்தில் நம் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் சொந்த வழிபாட்டுத் தலங்களை அவர்களே நிர்வகிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு கோயில்களை அரசு பிடியிலிருந்து விடுவிப்போம்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details