தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகைக் கடையில் ரூ.70,000 பீடி, சிகரெட் பண்டல்கள் திருட்டு - coimbatore

கோவையில் மளிகைக் கடையொன்றில் ரூ.70,000 மதிப்பிலான பீடி, சிகரெட் பண்டல்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மளிகை கடையில் திருட்டு
மளிகை கடையில் திருட்டு

By

Published : Aug 31, 2021, 12:21 AM IST

கோயம்புத்தூர்: சாராதா மில் சாலையில் பகவதி பாண்டியன் என்பவர் பாண்டியன் ஸ்டோர் என்ற மளிகை கடையை 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் (ஆக.28) வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை (ஆக.29) வந்து பார்க்கையில் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்க்கையில் பீடி, சிகெரெட் பண்டல்கள் மற்றும் பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்க பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. பீடி, சிகரெட் பண்டல்களின் மதிப்பு ரூ.73 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார்

இது குறித்து பகவதி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகைக் கடையில் இருந்து மற்ற பொருள்களை விட்டுவிட்டு பீடி, சிகரெட் பண்டல்களை மட்டும் திருடி சென்ற சம்பவம் காவல்துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்த விவகாரம் - அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details