கோவை:தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் நசீர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த வாரம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்கு கணக்கெடுப்பு சென்ற வனக்காப்பாளர், சமூக ஆர்வலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. ஊழியர்கள் வனத்திற்குள் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
ஆபத்தான பணியை மேற்கொள்ளும் வனத்துறை ஊழியர்கள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியம் பெற்று வரும் வனக்காப்பாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து பதவி உயர்வு அளிக்க வேண்டும்.