கோயம்புத்தூர்:கோவை மணியக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், எதிர் வீட்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைப்பதற்காக, மேயர் கல்பனா குடும்பத்தினர் சரண்யா மற்றும் அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பதாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், மேயர் கல்பனா தனது வீட்டின் முன்பு குப்பை போன்ற அழுகிய நிலையிலுள்ள துர்நாற்றம் வீசும் பொருட்களை அருகில் போடுவதாகவும், மேலும் வீட்டின் முன்பு சிறுநீரை ஊற்றுவது போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கோவை மாவட்ட மேயரின் எதிர் வீட்டில் வசித்து வரும் சரண்யா தெரிவித்திருந்தார்.
மேலும், வீட்டின் முன்பு மந்திரித்த எலுமிச்சைப் பழங்களை வைத்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் மேயர் கல்பனா அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சில நாட்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க:பெங்களூரில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு.. என்ன காரணம்? போலீசார் தீவிர விசாரணை!