தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு! - கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோயம்புத்தூர்: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

dead body
dead body

By

Published : Apr 9, 2021, 1:41 PM IST

கோயம்புத்தூர் தடாகம் சாலை முத்தண்ணன் குளம் கரையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒதுங்கிக் கிடந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற மக்கள் பார்த்து ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்தச் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின் இறந்தவர் குறித்த தகவல் தெரியாததால் காவல் துறையினர் இறந்தவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

மேலும் இறந்தவரின் கழுத்துப்பகுதி அறுப்பட்டு இருப்பதால் யாரேனும் கொலைசெய்யத்திருக்கலமா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details