தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2021, 6:22 AM IST

ETV Bharat / state

கரோனா தொற்றால் வீதி முழுவதும் மூடல்: பொதுமக்கள் எதிர்ப்பு

கோயம்புத்தூர்: கரோனா தொற்றால் வீதி முழுவதும் மூடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு
பொதுமக்கள் எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோயில் வீதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் அந்த வீதி முழுவதும் மூடினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திடீரென சாலையில் திரண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அலுவலர்கள் தடுப்புகளை அகற்றினர்.

கரோனா தொற்றால் வீதி முழுவதும் மூடல்

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details