கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூட்டுறவு வங்கி அருகில் இன்று காலை 7 மணி அளவில் சிறுத்தை இருப்பதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "நகர் பகுதிகளில் சிறுத்தைக்கு தேவையான இறை, வெகு இலகுவாக கிடைத்துவிடம் என்பதினாலே, சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாகவும், இதுவரை வால்பாறை பகுதியில் ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றை வேட்டையாடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.