தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் படுகாயம் - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகக்குழுக் கூட்டத்தில் நில விற்பனை தொடர்பாக இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.

v
படுகாயமடைந்த வழக்கறிஞர் நேச மெர்லின்

By

Published : Jul 19, 2021, 10:52 PM IST

கோவை: கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (ஜூலை 19) பிஷப் அப்பாசாமி கல்லூரியில், திருமண்டல பேராயர் திமோதி ரவீந்தர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் நேச மெர்லின், சி.எஸ்.ஐ. நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலம் குறைவான விலைக்கு விற்பனைசெய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக இரு குழுக்களாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

படுகாயமடைந்த வழக்கறிஞர் நேச மெர்லின்

இதில் வழக்கறிஞர் நேச மெர்லினின் மண்டை உடைக்கப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயி அடித்துக் கொலை - மனைவி உள்பட உறவினர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details