தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்கள்- பி.ஆர்.நடராஜன் தாக்கு

கோவை: பாஜகவில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பி.ஆர்.நடராஜன்

By

Published : Apr 16, 2019, 4:16 PM IST

கோவை மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இறுதி கட்டமாக புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் இறுதி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டியால் பாதிப்பு இருப்பது உண்மை, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் இல்லை என்று மாறிமாறி பேசுகிறார். ஜி.எஸ்.டி. தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்வதில் எது உண்மை என்று தெரியவில்லை. வாக்குகளுக்காக அவர் பொய் பேசுகிறார். பாஜகவின் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்களாக உள்ளனர்.

பி.ஆர்.நடராஜன் தேர்தல் பரப்புரை

மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா ஆட்சி என சொல்லும் அதிமுகவினர், ஜெயலலிதாவின் வழியில் நடக்கவில்லை " என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details