தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது! - கோயம்புத்தூர் மாவட்டம் செய்திகள்

கோயம்புத்தூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது மாணவனை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

கைது
கைது

By

Published : Aug 26, 2020, 3:46 PM IST

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவரது வீட்டிற்கு அருகில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த மாணவன், பள்ளி மாணவியை தனது வீட்டின் அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

ABOUT THE AUTHOR

...view details