தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2019, 9:30 AM IST

ETV Bharat / state

பாதியில் நிறுத்தப்பட்ட பாலப்பணிகளால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!

கோவை: பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட பாலப் பணிகளை, விரைந்து முடிக்கக்கோரி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

pollachi

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆழியார், வால்பாறை போன்ற இடங்களுக்குப் பொது மக்கள் செல்கின்றனர். இந்நிலையில், புளியகண்டி பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையை அகலப்படுத்தும் பணியும், மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டன.

ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களுக்கும் அச்சத்துடன் இந்த சாலையைக் கடந்து செல்கின்றனர்.

முழுமையாகப் பணிகள் முடிக்கப்படாத பாலம்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாலும், பாலத்தில் கொட்டப்பட்டிருந்த மண் காற்றில் பறப்பதாலும் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பாலத்தின் பணியை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து முடிக்கவும், அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ

ABOUT THE AUTHOR

...view details