கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள கண்ணப்பன் நகரை ஒட்டியுள்ள பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை மாற்று இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளாத நிலையில், திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்வோம் என மீன்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.