கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 160 வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஆழியாறு பகுதியைச் சேர்ந்த திவாகரன் என்ற மாணவன் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவன் திவாகரன் கூறும்போது, 'நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை பெயிண்டிங் வேலை செய்கிறார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் வெல்வதே எனது லட்சியம்' என்றார்.
மாணவனின் உடற்கல்வி இயக்குநர் செல்வகுமார் கூறும்போது, 'கடந்த வருடம் பிரபு என்கிற மாணவன் மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார். அதேபோல் இந்த வருடம் திவாகரன் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரும் கண்டிப்பாக போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்ப்பார்.