தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அமைத்து தீவிரம் காட்டிவந்தனர். தற்போதுவரை தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் சோதனைச் சாவடியில் இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியிலிருந்து கேரளாநோக்கிவந்த சொகுசு காரை நிறுத்தியபோது, அந்தக் கார் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் கோபாலபுரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அந்தக் காரை பின்தொடர்ந்து சென்று, கோபாலபுரம் அருகே காலை மடக்கிப் பிடித்தனர்.