இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் போல பொள்ளாச்சி ரயில் நிலையத்தைத் தகர்க்க குண்டு வைத்துள்ளதாக நேற்று (ஏப்ரல் 27) நள்ளிரவு காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரிவித்து தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லாததால் திரும்பிய காவல் துறையினர், அவசர எண் இணைப்பு எண்ணிற்கு அழைத்து பொய்யான தகவல் தெரிவித்தது யார் என்பது குறித்து தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதனைச் செய்தவர் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விவேகானந்த காலனியைச் சேர்ந்த கடலை வியாபாரி ருக்மாங்கதன் என்பது தெரியவந்தது.