கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு மனு கொடுத்திருந்தனர்.
ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி! - pollachi
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
pollachi Azhiyar dam opened for irrigation
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க இன்று (மே 16) உத்தரவிட்டது. இதனையடுத்து, இன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், அலுவலர்கள் மலர்த்தூவி ஆழியார் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
இதையும் படிங்க: பலத்த காற்றுக்கு எட்டு வீடுகள் இடிந்து சேதம்!
Last Updated : May 16, 2021, 10:21 PM IST