தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மாதங்களுக்குப்பின் முன்பதிவை தொடங்கிய ஆனைமலை டாப் சிலிப்! - Topslip started online booking after 9 months

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப் சிலிப் தங்கும் விடுதிகள் ஒன்பது மாதங்களுக்கு பிறகு முன்பதிவை தொடங்கியுள்ளது.

pollachi Anaimalai Topslip started online booking after 9 months
pollachi Anaimalai Topslip started online booking after 9 months

By

Published : Dec 23, 2020, 1:43 PM IST

பொள்ளாச்சியை அடுத்த டாப் சிலிப் பகுதிக்கு ஆண்டு தோறும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக வனத்துறையின் இணையதளம் மூலம், சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்குவதற்கு முன்பதிவுகளை செய்து வந்தனர்.

மேலும், வனத்தை சுற்றிப்பார்க்க, கும்கி யானை சவாரியையும் வனத்துறை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பயணிகள் தங்கவும் வனத்தையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அம்புலி, டிரீ டாப், பைசன் மற்றும் மூங்கில் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் விதவிதமான தங்கும் விடுதிகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். விடுதிகளின் வசதிக்கேற்ப இங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாக கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் வனத்துறைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (டிச. 22) முதல் இணையவழியில் டாப் சிலிப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் டாப் சிலிப்புக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், யானை வளர்ப்பு முகாம் மற்றும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டாப்சிலிப்பில் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணும் யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details