தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது! - police arrested a child selling gang at coimbatore

கோவை: குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police arrested a child selling gang
கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது

By

Published : Dec 18, 2019, 7:34 AM IST

Updated : Dec 18, 2019, 8:28 AM IST

கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர் என்பவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை தேவை எனக் குழந்தை விற்பனை செய்யும் கும்பலான ஹசீனா, அவரது தோழி கல்யாணி ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் குழந்தைக்கான பணத்தையும் பேசியுள்ளனர். இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த கண்ணன் - ஜோதி என்ற தம்பதியினரை ஆண் குழந்தையுடன் கோவை கருமத்தம்பட்டி அழைத்து வந்த ஹசீனா ,கல்யாணி; அந்தக் குழந்தையை ஜாகீரிடம் காட்டியுள்ளனர்.

பின்னர், சூலூரில் வைத்து குழந்தையைத் தருவதாகக் கூறி, அங்கு அனைவரும் ஒன்று கூடிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஜாகீரிடம் புரோக்கர்கள் ஹசீனா , கல்யாணி ஆகியோர் கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மூன்று பேரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சாலையில் சண்டையிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மூன்று பேரையும் சூலூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறை, ஆண் குழந்தையுடன் இருந்த கண்ணன் - ஜோதி தம்பதியினரையும் பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சூலூர் காவல் துறை, கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்பதால் 5 பேரையும் கருமத்தம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தற்போது கருமத்தம்பட்டி காவல் துறை வழக்குப்பதிவு செய்து 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குழந்தையை விற்க வந்த மதுரையைச் சேர்ந்த கண்ணன்-ஜோதி தம்பதியினர் ஏற்கெனவே தங்களது முதல் குழந்தையை, இதேபோன்று விற்பனை செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஆண்குழந்தை யாருக்காக வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் குழந்தை விற்கும் கும்பல் கைது

இந்த வழக்கில் கைதான ஹசீனா, நாமக்கல் குழந்தைக் கடத்தல் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக ஹசீனா நாமக்கல் குழந்தைக் கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இறந்த நிலையில் கரையொதிங்கிய கடல் பசு; கட்டி இழுத்த போலீஸ்!

Last Updated : Dec 18, 2019, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details