தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2022, 11:23 AM IST

ETV Bharat / state

யார் இந்த போலீஸ் அக்கா...? கல்லூரி மாணவிகளுக்கு புதிய திட்டம்..! கோவை போலீசாரின் அசத்தல்..!

கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுவதை நோக்கமாக வைத்து ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் கோவை மாநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யார் இந்த போலீஸ் அக்கா? - காவல்துறையின் புதிய முன்னெடுப்பு
யார் இந்த போலீஸ் அக்கா? - காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு காவல்துறையின் முன்மாதிரி திட்டமாக, கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்கவும், அதற்கான ஆலோசனைகளை வழங்கவும் "போலீஸ் அக்கா" என்ற திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகள், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேநேரம் மாணவிகள் கொடுக்கப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவியர்களுக்கு நல்ல சகோதரியாக காவலர்கள் (போலீஸ் அக்காவாக) செயல்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாரம் ஒரு முறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளிடம் கலந்துரையாடி தகவல்கள் கோரிக்கைகள் கேட்டறிவர். இத்திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:இளைஞர்களே உஷார்:வெளிநாட்டு வேலை மோகம்..ஏமாற்றும் கும்பல் ஏராளம் - டிஜிபி அட்வைஸ்

ABOUT THE AUTHOR

...view details