கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா பணப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள் பெண்களை செல்ஃபோனில் காணொலி எடுத்து மிரட்டியது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கவிடாமல் ஊராட்சித் தலைவர் கட்ட பஞ்சாயத்து நடத்தியுள்ளார்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தன்னார்வலர் பெரியார் மணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "பணப்பட்டி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களுக்கு தனி நபர் கழிவறை, பொது கழிவறை ஆகியவை இல்லாத காரணத்தால், அங்குள்ள குட்டை பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க செல்லும் நிலை இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க குட்டை பகுதிக்கு சென்றபோது, அதே ஊரை சேர்ந்த சதீஷ், சசி, கோபால்சாமி, பிரபு ஆகிய நான்கு பேரும் புதரினுள் மறைந்திருந்து பெண்களை செல்ஃபோனில் காணொலியாக பதிவு செய்து மிரட்டியுள்ளனர்.