தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : May 8, 2019, 6:53 PM IST

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சீதா. இவர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.

அங்கு கோவிந்தசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட உறவினர்கள் அவரை பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவிந்தசாமியைக் காணவில்லை. அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை முழுவதும் அவரை தேடிப்பார்த்தனர்.

அப்போது மருத்துவமனை கழிவறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

பின்னர் மருத்துவமனையில் இருந்து கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கான அறையில் வைத்தனர். இது குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details