கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள 'ஹவுஸிங் யூனிட்' கட்டடங்களை தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1984ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 960 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு தரப்பட்டது.
தற்போது அதன் உறுதித்தன்மை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை இடித்துவிட்டு இங்கு குடியிருப்பவர்களுக்கு, புதியதாக வீடு கட்டித் தருவதற்கு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இங்கு குடியிருப்பவர்கள் சில நாட்களுக்குள் காலி செய்து தந்தால், ஒரு மாதத்திற்குள் இந்த சிதிலமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர அரசு தயாராக உள்ளது.