தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தி வந்த நபர்கள்
கஞ்சா கடத்தி வந்த நபர்கள்

By

Published : Nov 12, 2020, 8:01 PM IST

கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மதுக்கரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மறித்து சோதனை செய்தனர். அவர்களது இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அகில் மற்றும் சரோன் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 5 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details