பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி சந்தான லெட்சுமியும், மகன் செந்தில்வேலும் பூர்வீக சொத்துக்களை எழுதி வைக்கும்படி இவரை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.
முதியவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கடந்தாண்டு புகார் கொடுத்தார். ஆனால் மீண்டும் முதியவரை அவரது குடும்பம் சொத்துக்காக அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.