தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீனர்கள் என நினைத்து வடமாநில பெண்களிடம் தகராறு செய்யும் இளைஞர்கள் - north indian women mistook as chinese harassed

கோவை: வடமாநிலப் பெண்களை சீனப் பெண்கள் எனக்கூறி ஊரை விட்டுச் செல்லுமாறு இளைஞர்கள் மிரட்டுவதாக வட மாநிலப் பெண்கள் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

manipur women mistook as chinese harassed by men
manipur women mistook as chinese harassed by men

By

Published : May 18, 2020, 7:58 PM IST

கோவை மாவட்டத்தில் மேகாலாயா, மணிப்பூர், அஸ்ஸாம் உள்பட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி கல்லூரிகளில் படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இவர்களில் பலர் சாய்பாபா காலனி பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகின்றது.

தகராறு செய்யும் இளைஞர்

வடமாநில பெண்களின் தோற்றத்தைக் கொண்ட அவர்களை சீனாவை சேர்த்தவர்கள் என நினைத்துக் கொண்டு, அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் தள்ளிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வடமாநிலப் பெண்கள் சாய்பாபா காவல்துறையில் புகார் அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், உங்களால்தான் கரோனா பரவுகிறது எனக் கூறி, "கோ கரோனா" என கத்துவதாகவும், தகாத வார்த்தைகளில் பேசுவதுடன் தள்ளிவிடுவதாகவும் கூறினர்.

சீனர்கள் என நினைத்து வடமாநில பெண்களிடம் தகராறு

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனுடன் தகராறு செய்த இளைஞரின் வீடியோவையும் வடமாநிலப் பெண்கள் சாய்பாபா காலனி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க... ஜன்னல் சுவர் மீது ஏறி தகராறு செய்த வடமாநில பெண்ணால் பரபரப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details