கோவை:பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குளி கிராமம் அருந்ததியர் காலனியில் நூற்றுக்கு மேற்பட்ட அருந்ததியர் எனும் பட்டியலின சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்றங்கரையோரம் 6-க்கு 4 என்ற அளவில் மட்டுமே மயான வசதி உள்ளது.
இந்நிலையில், ஒரு மாதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டால் இந்த மயானத்தில் 6*4 என்ற அளவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது.
குறிப்பாக ஒரு புதைத்த உடலை தூக்கி வெளியே வைத்துவிட்டு தான் மற்றொரு உடலைப் புதைக்க முடியும். 40 ஆண்டுகளாக இந்நிலையை இப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து மயான வசதி ஏற்படுத்தி தரக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் அவர்களிடமும் மற்றும் நல்லூத்துக்குளி ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி மன்றம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இன்றளவும் எடுக்கவில்லை. நல்லூத்துக்குளி கிராமம் அருந்ததியர் காலனியில் நாகராஜன் (44) என்பவர் கடந்த செவ்வாயன்று(ஜூன் 7) இரவு உயிரிழந்துள்ளார்.