கோவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிராஸ் கட் சாலையில் செல்போன் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவியது.
இதனால் கிராஸ் கட் சாலையின் 10 தெருக்களில் உள்ள செல்போன் கடைகள், செல்போன் சர்வீஸ் கடைகள், உதிரிபாக கடைகள் அனைத்தையும் மூட கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.