தமிழ்நாடு

tamil nadu

அயராது உழைத்து வெற்றியை ஈட்டி தருவோம் - மநீம தொண்டர்கள்

By

Published : Mar 12, 2021, 6:31 PM IST

கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான நடிகர் கமல்ஹாசன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

MNM
MNM

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

மக்கள்நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்

இதுகுறித்து மக்கள்நீதி மய்யம் தொண்டர்கள் கூறுகையில், "முதலமைச்சர் வேட்பாளரான கமல், தங்கள் தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சி முதலமைச்சர் வேட்பாளர்கள் கோயம்புத்தூரில் போட்டியிடவில்லை. ஆனால் தற்போது கமல்ஹாசன் கோயம்புத்தூரில் போட்டியிடுவது மகிவும் மகிழ்ச்சி.

அயராது உழைத்து கமல்ஹாசனுக்கு வெற்றியை பெற்று தருவோம் என்றும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் 2021: முதன்மைத் தகவல்கள் உடனுக்குடன்...

ABOUT THE AUTHOR

...view details