உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 97ஆவது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ”விவசாயிகள் சிரமத்தில் இருப்பதை அறிந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 12 ஆயிரத்து 500 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ததை நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு தலைவர் அறைக்குள் இருந்து கொண்டு வீரவசனம் பேசி வரும் நிலையில், கரோனாவிலிருந்து முதலமைச்சர் மக்களை காப்பாற்றியுள்ளார்.