தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி.. அமைச்சர் மூர்த்தி விடுத்த கோரிக்கை! - request GST Council

Minister P Moorthy: சமாதானத் திட்டத்தை முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனே பாராட்டியதாகவும், இத்திட்டத்தில் வணிகர்களுக்கு அரசு சலுகை தருவதாகவும் ஆகவே, சமாதானத் திட்டத்தில் இணைந்து வணிகர்கள் வரி நிலுவையை கட்ட வேண்டும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:24 PM IST

அமைச்சர் பி.மூர்த்தி

கோவை:அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி விதிப்பதை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் கோரிக்கை வைக்கப்படும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத்‌ திட்டம்‌ குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம்‌ இன்று (நவ.7) வணிகவரித்துறை அமைச்சர்‌ பி.மூர்த்தி தலைமையில்‌ நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்ககளின் வணிகர் சங்க நிர்வாகிகளும், அந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, '1999ஆம் ஆண்டு இந்த சமாதானத் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவையில், இருக்கும் 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து 1,002 சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன. அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி இருப்பதை சரிசெய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர் எனவும், மத்திய அரசிடம் அரிசிக்கான கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம். இது போன்று வணிகவரித்துறையில் தள்ளுபடி செய்து இருப்பது வரலாற்றில் கிடையாது.

வணிக பெருமக்கள் 12 ஆண்டு காலம் சலனப்பட்டு இருந்தார்கள், அவர்களுக்காகவே இந்த சமாதானத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 90 சதவீதம் வணிகர்கள் நியாயமாக இருந்தாலும் 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரைக் கெடுக்க இருக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதானத் திட்டத்திற்கு வந்துவிடலாம்.

மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களை அழைத்து சமாதானத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கின்றோம். இப்போது இருக்கும் நிலுவை வரியை கட்டினால்தான், இன்னும் இரு ஆண்டுகள் வரை இந்த சலுகையை நீடிக்க முதலமைச்சரிடம் கேட்க முடியும். சமாதானத் திட்டம் குறித்து பேசும்போது, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கொண்டு வாருங்கள். தமிழ்நாடு மக்களே உங்களை பாராட்டுவார்கள் என சொன்னார் எனவும் தெரிவித்தார். சிறிய தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன்' என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'சமாதான திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை அரசு கொடுத்து இருக்கின்றது. அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். வணிகர்கள் மத்தியில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விண்ணப்பிப்பதற்கு அரைமணி நேரம் போதும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கின்றது. பேக் பண்ணிய அரிசிக்கு ஒருவித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம். கோதுமை, அரிசிக்கு பாகுபாடு காட்டுவதாக சொல்லவில்லை' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: உயர் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details