தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2020, 12:57 PM IST

ETV Bharat / state

சரக்குக்கு பதில் சானிடைசர் குடித்தவர் உயிரிழப்பு!

கோயம்புத்தூர்: மது கிடைக்காத நிலையில் மாற்று போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் உயிரிழந்தார்.

மாற்று போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்த பெர்னான்டெஸ்
மாற்று போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்த பெர்னான்டெஸ்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெர்னான்டஸ். இவர் சூலூரில் உள்ள தனியார் எரிவாயு நிறுவனத்தில் சிலிண்டர் விநியோகப் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிறுவனத்தின் மூலம் கிருமி நாசினி வழங்கப்பட்டது.

கிருமி நாசினியில் ஆல்கஹால் இருப்பதை அறிந்த பெர்னான்டெஸ் , கடந்த இரண்டு தினங்களாக சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து போதைக்காக குடித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மாற்று போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்த பெர்னான்டெஸ்

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா: வெடிமருந்து தொழிற்சாலையில் தயாராகும் சானிடைசர்!

ABOUT THE AUTHOR

...view details