கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் கோட்டத்திற்குட்பட்ட அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கமுடியாத வழக்குகளாக நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்து வைக்க காவல்துறை சார்பில் இன்று (அக்.17) மகா பெட்டிசன் மேளா முகாம் நடத்தப்பட்டது.
அன்னூர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமில் கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னைகளை சார்ந்த வாதி, பிரதிவாதி என இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.