கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வால்பாறை பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், காட்டு பகுதியை விட்டு அவ்வப்போது பொதுமக்கள் வசிக்கும் நகர பகுதிகளுக்கும் விலங்குகள் வரும்.
இதற்கிடையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூன்று சிறுத்தைகள் உலா வந்ததை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தனர்.