தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இன்று 543 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Sep 18, 2020, 8:59 PM IST

கோவை : கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோவையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.

kovai Latest Corona Update
kovai Latest Corona Update

கோவையில் இன்று (செப். 18) 543 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்றுவந்த 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details